இலங்கை செய்தி

4 நாட்களுக்குள் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

  • February 7, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 04  நாட்களுள் மாத்திரம் 40 ஆயிரத்து 54 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 1 முதல் 04 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 5 ஆயிரத்து 287 பேரும், பிரிட்டனில் இருந்து 5ஆயிரத்து 184 பேரும், ரஷ்யாவில் இருந்து3 ஆயிரத்து 817 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை […]

இலங்கை செய்தி

“படையினரை அவமதித்த தரப்பே தற்போது அபிமானம் பற்றி கதைக்கிறது”

  • February 7, 2026
  • 0 Comments

“படையினரை மணல் மூட்டை அடுக்குவதற்கு அன்று பயன்படுத்தியவர்களே, இன்று படையினருக்குரிய அபிமானம் பற்றி கதைக்கின்றனர்.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். சுதந்திர தின அணிவகுப்பின்போது போரை முடிப்பதற்கு படையினர் வழங்கிய பங்களிப்பு பற்றி பேசப்படவில்லை என மஹிந்த அணி குற்றஞ்சாட்டிவருகின்றது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியவை வருமாறு, “ முப்படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அபிமானம் என்னவென்பது எமக்கு தெரியும். அதனை நாம் பாதுகாப்போம். […]

விளையாட்டு

போராடி தோற்றது நெதர்லாந்து! பாகிஸ்தான் அணி வெற்றி!!

  • February 7, 2026
  • 0 Comments

T20 உலக்கிண்ண தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் போராடி தோற்றது நெதர்லாந்து அணி. கடைசி ஓவர் வரை நெதர்லந்து அணி பாகிஸ்தானுக்கு சவால் கொடுத்து அச்சுறுத்தியதால் போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்கவில்லை. T-20 உலக்கிண்ண தொடர் இன்று ஆரம்பமானது. முதல் ஆட்டத்தில் ‘குரூப்-ஏ’ பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதற்கமைய நெதர்லாந்து […]

இலங்கை செய்தி

தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் துணை நிற்க வேண்டும்: மனோ கோரிக்கை!

  • February 7, 2026
  • 0 Comments

“ சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் Tamil Progressive Alliance தலைவர் மனோ கணேசன் எம்.பி. Mano Ganesan கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பற்றிக்குடன் Andrew Patrick நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை […]

இலங்கை செய்தி

“ இலங்கை படையினருக்கு எதிரான தடை சர்வதேச சட்டத்திற்கு முரண்”

  • February 7, 2026
  • 0 Comments

இலங்கை படை அதிகாரிகள் மீதான தடைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath சுட்டிக்காட்டியுள்ளார். இங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake கேள்விகளை எழுப்பி இருந்தார். இக்கேள்விகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நேற்று பதிலளித்தார். “ 2025 மார்ச் மாதம், பிரித்தானியாவினால் தடைகள் விதிக்கப்பட்ட போது, அமைச்சரவையில் ஆராயப்பட்டு, இது […]

இலங்கை செய்தி

அவசரகால சட்டத்துக்கு எதிராக இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணைக்கு எதிராக இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மட்டும் எதிராக வாக்களித்தனர். டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரை அடுத்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதையடுத்து அரசாங்கம் நாடாளுமன்ற அனுமதியுடன் அவசரகாலச் சட்டத்தை மாதம் தோறும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீது நேற்று […]

இலங்கை செய்தி

இலங்கைக்கான உதவி தொடரும்: வெளிவிவகார அமைச்சர் உறுதி!

  • February 6, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (06) சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது பேச்சு நடத்தப்பட்டுள்ளது. டித்வா புயலின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு டில்வின் சில்வா நன்றி தெரிவித்தார். இலங்கைக்கான தமது நாட்டு ஆதரவை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியாவின் உதவிகள் தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு : எதிரணி போர்க்கொடி!

  • February 6, 2026
  • 0 Comments

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை Emergency Law மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார். அவசரகாலச் சட்டத்தை இந்த அரசாங்கம் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்துகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எனவே, அச்சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் […]

விளையாட்டு

ICC T-20 உலகக்கிண்ண தொடர் நாளை ஆரம்பம்: முதல் நாளில் 3 ஆட்டங்கள்!

  • February 6, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண போட்டி தொடர் நாளை (07) கோலாகலமாக ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலேயெ போட்டிகள் இடம்பெறவுள்ளன. 20 அணிகள் பங்கேற்றுள்ள தொடரின் முதல் நாளிலேயே ரசிகர்களை கவரும் வகையில் மூன்று முக்கியப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கையில் ஒரு போட்டியும், இந்தியாவில் இரு போட்டிகளும் இடம்பெறவுள்ளன. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு எஸ்.எஸ்.சி. SSC […]

இலங்கை செய்தி

பிரிட்டனிடம் இழப்பீடு கோருமாறு சஜித் முன்மொழிவு: அரசு பச்சைக்கொடி!

  • February 6, 2026
  • 0 Comments

“காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான இழப்புக்கு , இழப்பீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், வெளிவிவகார அமைச்சரிடம் எழுப்பட்டிருந்த கேள்விகளுக்கு விஜித ஹேரத் பதிலளித்தார். அவ்வேளையில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மேற்படி விடயம் பற்றி அமைச்சரின் கவனத்தை […]

error: Content is protected !!