இலங்கை செய்தி

“பைபிள் விவகாரம்” – பொலிஸ் அதிகாரிக்கு திருநீறு பட்டை போட்டது சிவசேனை!

  • March 18, 2026
  • 0 Comments

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபையொன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாடு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தார் எனக்கூறி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி திருநீறு அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் சிவசேனை அமைப்பை சேர்ந்தவர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனமொன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

  • March 18, 2026
  • 0 Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஒப்பந்தம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டது. தொகுதிப் பங்கீடு இறுதிபடுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.வீரபாண்டியன், “கடந்த முறையைவிட இத்தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கோரினோம். ஆனால் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியண்ணன் மனப்பாண்மையில் திமுக […]

இந்தியா தமிழ்நாடு

அதிரும் தமிழக அரசியல் களம்: விஜய் தனி வழி!

  • March 18, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இம்முறை நான்குமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க. மற்றும் புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. மறுபுறத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கைகோர்த்திருக்கின்றன. வழக்கம் போல் தேர்தலில் தனித்து நிற்பது என்ற ஒற்றை இலக்குடன் சீமான் களத்தில் உள்ளார். இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தமிழரசுக் கட்சியின் முடிவால் எதிரணிக்குள் குழப்பம்!

  • March 18, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி ITAK தீர்மானித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சாணக்கியன் Chanakyan தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மீதான நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை போதுமான […]

உலகம்

இஸ்ரேல்மீது ஏவுகணை மழை பொழியும் ஈரான்: இருவர் பலி!

  • March 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 19 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலால் ரமத் கான் பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையான சேதமடைந்துள்ளன என்றும், அங்கிருந்து புகை மூட்டம் எழுவதாகவும் அவசரக்கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பல கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளதோடு, அப்பகுதி முழுவதும் […]

உலகம் செய்தி

நிச்சயம் பழி தீர்ப்போம்: ஈரான் ராணுவத் தளபதி சபதம்!

  • March 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி Ali Larijani கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி Amir Hatami கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான மற்றும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் புரட்சிகர காவல்படை ஏற்கனவே இஸ்ரேலின் மையப்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்று […]

உலகம் செய்தி

போருக்கு மத்தியில் அமெரிக்காவின் முக்கிய புள்ளி ராஜினாமா!

  • March 17, 2026
  • 0 Comments

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் US’s National Counterterrorism Center இயக்குநர் ஜோ கென்ட் (Joe Kent) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகின்றது. ஈரானுக்கு எதிரான போரை தன்னால் மனசாட்சியுடன் ஆதரிக்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்எனக் கூறப்படுகின்றது. டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட இவர், இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் நடக்கும் இத்தகைய மோதல்கள் அமெரிக்காவின் செல்வத்தையும் உயிர்களையும் […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறித்து தெரிவுக்குழு இன்று ஆராய்வு!

  • March 17, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அரசு நியமித்திருக்கின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நால்வரும் இவ்வாறு குற்றஞ்சாட்டினர். தெரிவுக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இன்று முற்பகல் 11 மணி முதல் நடைபெற்றது. ஏற்கனவே எட்டாவது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னர் இருந்த தேர்தல் முறைமைகளின் கீழ் […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலையில் கறுப்புக் கொடி: மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு!

  • March 17, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பில் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட மூவரை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் நேரடி ஆலோசனையின் கீழ் இந்த விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியினால் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பின்வரும் மூன்று மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. […]

இலங்கை செய்தி

“எரிபொருள் சிக்கனம்” – ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

  • March 17, 2026
  • 0 Comments

“எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் . அது தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையை அமைச்சு மட்டத்தில் உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நேற்று […]

error: Content is protected !!