ஆஸ்திரேலியா செய்தி

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம்: ஆஸ்திரேலிய படை அதிகாரி கைது!

  • April 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் Australian Defence Force (ADF) முன்னாள் வீரர் ஒருவர் சிட்னி விமான நிலையத்தில் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் 2005 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடத்தாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையின் ஓர் அங்கமாகவே இக்கைது இடம்பெற்றுள்ளது. 47 வயதான Ben Roberts-Smith என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை மற்றும் சிறப்பு விசாரணை அலுவலகத்தின் கூட்டு நடவடிக்கையின் பிரகாரம் அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் […]

உலகம் செய்தி

ஈரானில் மூன்று விமான நிலையங்கள்மீது தாக்குதல்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளிலுள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக Bahram, Mehrabad மற்றும் Azmayesh ஆகிய மூன்று விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய சில இலக்குகள்மீதும் பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை அழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, பொது மக்களின் இருப்பிடம் உட்பட சிவில் இலக்குகளை இஸ்ரேல் குறிவைப்பதாக […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தவறான குறிவைப்பு: அரசியல் தலைவர் பலி!

  • April 6, 2026
  • 0 Comments

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் எனக் கருதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அரசியல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட் அருகே உள்ள குடியிருப்பொன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எதிர்க்கும் The Lebanese Forces Party கட்சியைச் சேர்ந்த பியர் முவாத் Pierre Mouawad என்பவரே கொல்லப்பட்டுள்ளார். அவரது மனைவியும் இத்தாக்குதலில் பலியாகியுள்ளார். குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், தங்களது இலக்கு தவறிவிட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 9 ஆம் திகதி சபையில் விவாதம்!

  • April 6, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (09) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் இந்த வாரம் மூன்று நாள்களுக்குக் கூடவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவது தொடர்பாக […]

இலங்கை செய்தி

யாழில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!

  • April 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் நகை, பணம் மற்றும் பொருள்களைத் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். நகரின் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வளையல்கள் திருடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், கலட்டி அம்மன் கோயில் பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் புகுந்து 3.5 பவுண் தங்க மோதிரம் மற்றும் […]

இலங்கை செய்தி

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி: பயண ஏற்பாடு குறித்து ஆராய்வு!

  • April 6, 2026
  • 0 Comments

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் […]

இலங்கை செய்தி

“டிஜிட்டல் மயமாக்கல்” – ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு!

  • April 6, 2026
  • 0 Comments

“டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டமாகும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி கூறியவை வருமாறு, “பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம். எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான […]

இலங்கை செய்தி

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

  • April 6, 2026
  • 0 Comments

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (06) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate – MDR) முழுமையாக […]

உலகம் செய்தி

ஈரான் உளவு பிரிவு தலைவரின் கதையை முடித்துவிட்டோம்: வேட்டை தொடரும் என்கிறது இஸ்ரேல்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் Majid Khademi இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இன்று (06) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஈரானியத் தலைவர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அதேவேளை, தமது உளவுப் பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஈரானின் கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி உட்பட முக்கிய தளபதிகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது […]

உலகம் செய்தி

பாகிஸ்தானால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது ஈரான்!

  • April 6, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் முன்மொழிந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்துள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உறுதிப்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறியே ஈரான் நிராகரித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. நிலையான அமைதித் திட்டத்துக்கு வாஷிங்டன் தயாராக இல்லை என்றும், அந்நாட்டால் தங்களுக்கு காலக்கெடு விதிப்பதை ஏற்க முடியாது என்றும் ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். எனினும், போர் நிறுத்தத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் […]

error: Content is protected !!