அரசியல் இலங்கை செய்தி

தடைகளைத் தகர்த்தெறிந்து இலக்கை அடைவோம்: ஜனாதிபதி முன்னிலையில் சந்திரசேகர் சூளுரை!

  • January 15, 2026
  • 0 Comments

“நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இலக்கை நோக்கி பயணிப்போம்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். யாழில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையில் டித்வா புயலால் 400 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் காணாமல் போனார்கள். அதுமட்டுமல்ல முழு நாடும் ஸ்தம்பிதமடைந்தது. […]

இலங்கை செய்தி

வடக்கு மண்ணில் தைப்பொங்கலை கொண்டாடும் ஜனாதிபதி அநுர!

  • January 14, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தைப்பொங்கல் தினத்தன்று வடக்குக்கு பயணம் மேற்கொள்கின்றார். இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ். வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு வட மாகாண தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பார். அத்துடன், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் […]

இலங்கை செய்தி

கஞ்சாவுடன் சிக்கிய அரசியல்வாதி: யாழில் பரபரப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று (30) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் வைத்து அவர் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது பிரதேச […]

அரசியல் இலங்கை செய்தி

தேரரின் பேஸ்புக் வீடியோவால் கடுப்பில் அர்ச்சுனா!

  • December 25, 2025
  • 0 Comments

தையிட்டி விகாரை தொடர்பில் நாகதீப விகாரையின் விகாராதிபதி வெளியிட்டுள்ள கூற்று சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கோவில், விகாரை என்பவற்றை உடைத்து அரசியல் நடத்தப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும், தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் என்று நாகதீப விகாரையின் விகாராதிபதி கூறுகின்றார். முகநூல் நேரலை ஊடாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்தாமல், நாட்டை […]

error: Content is protected !!