இலங்கை செய்தி

அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்சவுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரை!

  • January 27, 2026
  • 0 Comments

“சட்டத்தை மதித்து செயல்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு Shiranthi Rajapaksa உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்றது. இதன்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் FCID பிரிவில் முன்னிலையாவதற்கு ஷிரந்தி ராஜபக்ச இரு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கூறியவை […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ள “நம்பிக்கையில்லாப் பிரேரணை”!

  • January 27, 2026
  • 0 Comments

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ முதலில் பிரதமருக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் ஆயுதமாக மாறியுள்ள “கல்வி”!

  • January 17, 2026
  • 0 Comments

கல்வியைக்கூட அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நிலைக்கு எதிரணி வந்துவிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பேரிடரை வைத்து அரசியல் நடத்திய எதிரணி, தற்போது கல்வி மறுசீரமைப்பையும் குழப்ப முற்படுகின்றது. இதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறினார். அத்துடன், கல்வியில் ஆபாசத்தை புகுத்துவதற்கு முயற்சி இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் நடக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாள் நிர்ணயம்!

  • January 14, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Dr. Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa நேற்று மேற்படி தகவலை வெளியிட்டார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றோம். அது தொடர்பில் இரு நாட்கள் விவாதிப்பதற்கு நாம் தயார். தேவையேற்படின் மேலும் மூன்று […]

இலங்கை செய்தி

“தரம் 6” கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

  • January 13, 2026
  • 0 Comments

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. உரிய மீளாய்வுகளின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார். எனினும், தரம் 1 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் எனவும் அமைச்சர் கூறினார். “ தரம் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் சுகாதார துறைக்கு ரூ. 21 பில்லியன் இழப்பு!

  • December 29, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கையின் சுகாதார கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது. இந்நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டித்வா புலயால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என உலக […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துகிறது வியட்நாம்!

  • December 26, 2025
  • 0 Comments

இலங்கைக்கும் (Sri Lanka) , வியட்நாமுக்கும் (Vietnam) இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் (Nalinda Jayatissa), இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டாமுக்கும் (Trinh Thi Tam) இடையிலான சந்திப்பு நேற்று (26) நடைபெற்றது. இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!