இலங்கை செய்தி

ஊழலை ஒழிப்பதில் அநுர அரசு உறுதி:வடக்கு ஆளுநர் திட்டவட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

“ஊழலை ஒழிப்பதில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான்” – எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி […]

இலங்கை செய்தி

வீட்டை கொளுத்திய தந்தை: 13 வயது மகள் பலி! மேலும் நால்வருக்கு எரிகாயம்!

  • January 6, 2026
  • 0 Comments

update வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். ……………. முதலாம் இணைப்பு வீட்டை கொளுத்திய நபரும், அவரது 13 வயது மகளும் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் நபரின் மனைவி , மாமியார், மகன், மகள் ஆகியோரும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது மூன்று பிள்ளைகளுடன் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை  […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகரசபையில் ஊழல்: விசாரணைக்குழு நியமனம்: ஜனாதிபதி அதிரடி!

  • December 31, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பியசேன ரணசிஹ்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் மூவர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்ஹ, கணக்காய்வாளர் சேவை அதிகாரி ஏக்க நாயக்க ஆகியோரும் மேற்படி குழுவுக்கு பெயரிடப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் […]

இலங்கை செய்தி

கஞ்சாவுடன் சிக்கிய அரசியல்வாதி: யாழில் பரபரப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று (30) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் வைத்து அவர் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது பிரதேச […]

error: Content is protected !!