கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனம் மோதி பலி: புத்தாண்டில் சோகம்!
வாகன பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரியொருவர் வேன் மோதி பலியாகியுள்ளார். மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை Ambalangoda நகரிலேயே இன்று (01) அதிகாலை 2.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பொலிஸ் அதிகாரிகள் , அம்பலாங்கொடை நகரில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வேனொன்றை நிறுத்துவதற்குரிய சமிக்ஞையை வெளிப்படுத்தினர். அவ்வேளையிலேயே இரு அதிகாரிகளையும் மோதி தள்ளிவிட்டு வேனில் சென்றவர்கள், தப்பியோடியுள்ளனர். அம்பாந்தோட்டை பகுதியை நோக்கியே குறித்த […]




