அரசியல் இலங்கை செய்தி

“புத்தாண்டில் புதிய அமைச்சை கோருகிறார் சஜித்”

  • January 1, 2026
  • 0 Comments

“இவ்வருடத்திலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (01) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு நடந்த துயர் மிகு நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் நேசக்கரம்!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் Communist Party of China (CPC) நிவாரணம் வழங்கவுள்ளது. இதற்கமைய சீன நாணய மதிப்பில் ஒரு மில்லியன் பெறுமதியான RMB 1 million நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கான சீன தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் மேற்படி தகவல் இன்று (30) வெளியிடப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அண்மையில் இலங்கை வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பிக்கும், சீன கம்யூனிஸ் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் சுகாதார துறைக்கு ரூ. 21 பில்லியன் இழப்பு!

  • December 29, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கையின் சுகாதார கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது. இந்நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டித்வா புலயால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என உலக […]

அரசியல் இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி போதாது: நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!

  • December 27, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கு இன்னும் போதுமான சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (27) சுட்டிக்காட்டினார். எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும். முகாம்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் […]

அரசியல் இலங்கை செய்தி

அடக்கி ஆள்வதற்கா அவசரகால சட்டம்?

  • December 26, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. எனினும், எந்தவொரு கட்டத்திலும் அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக ஒடுக்கமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. ஊடகங்கள் என்னை விமர்சித்தால்கூட அது பற்றி நான் கவலை அடையமாட்டேன். […]

error: Content is protected !!