சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு சஜித் மீண்டும் வலியுறுத்து!
டித்வா சூறாவளியால் நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்பு பெரும் இழப்பாகும். மிகப்பெரிய நிதி இழப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது. அரச தரப்பில் இருக்கும் பலர் என்ன விடயங்களைச் சொன்னாலும், இந்த இழப்பை எதிர்கொண்டு, அதைத் […]




