இலங்கை செய்தி

இலங்கையில் 2026 முதல் பாடசாலை நேரத்தில் மாற்றமா?

  • January 2, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு என்பன வழமைக்கு திரும்பும்வரை வழமையான நேரப்படியே பாடசாலை நடைபெறும். கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டில் 5-13 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாறாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் […]

அரசியல் இலங்கை செய்தி

6 ஆம் திகதி கூடுகிறது அதிஉயர் சபை: அவசரகால சட்டம், தெரிவுக்குழு பற்றி ஆராய்வு!

  • January 1, 2026
  • 0 Comments

புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன. அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு, அங்கீரிக்கப்படவுள்ளது. அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் பிரேரணை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கு இன்று: டாக்கா பறந்தார் விஜித ஹேரத்!

  • December 31, 2025
  • 0 Comments

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் Khaleda Zia இறுதிச்சடங்கு இன்று (31) நடைபெறுகின்றது. தெற்காசிய நாடுகளில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தவுள்ளனர். இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath பங்கேற்கின்றார். இதற்காக இன்று காலை அவர் பங்களாதேஸ் தலைநகர் டாக்கா நோக்கி பயணமானார். பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தனது 80 ஆவது வயதில் நேற்று காலமானார். ஆவரின் மறைவையொட்டி பங்களாதேஸின் மூன்று நாட்கள் […]

இலங்கை செய்தி

வசூலில் சாதனை படைத்த சுங்கத் திணைக்களம்: ஜனாதிபதி பாராட்டு!

  • December 30, 2025
  • 0 Comments

இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் 2025 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கான 2,115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் பெறப்பட்டுள்ளது. இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) முற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, […]

இலங்கை செய்தி

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!

  • December 30, 2025
  • 0 Comments

இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலில் தற்காலிக தொழில்களில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் ஊழியச் சந்தையில் தற்காலிக தொழில்களில் அமர்த்துவதற்கு இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2020 பெப்ரவரி 05 […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் நேசக்கரம்!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் Communist Party of China (CPC) நிவாரணம் வழங்கவுள்ளது. இதற்கமைய சீன நாணய மதிப்பில் ஒரு மில்லியன் பெறுமதியான RMB 1 million நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கான சீன தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் மேற்படி தகவல் இன்று (30) வெளியிடப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அண்மையில் இலங்கை வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பிக்கும், சீன கம்யூனிஸ் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் சுகாதார துறைக்கு ரூ. 21 பில்லியன் இழப்பு!

  • December 29, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கையின் சுகாதார கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது. இந்நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டித்வா புலயால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என உலக […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு எமனாக மாறியுள்ள “வாகன விபத்து”! நூற்றுக்கணக்கானோர் பலி!

  • December 29, 2025
  • 0 Comments

இலங்கையில் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இம்முறை அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இதுவரையில் வீதி விபத்துகளால் 2 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. கொழும்பில் இன்று (29) போக்குவரத்து பொலிஸாரால் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. […]

இலங்கை செய்தி

சுற்றுலாத் துறையில் புதிய மைல் கல்லை எட்டியது இலங்கை!

  • December 29, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 797 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கை வரலாற்றில் வருடமொன்றில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 பதிவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்திருந்தனர். இதுவே இதுவரை காலமும் சாதனை எண்ணிக்கையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஏப்ரலில் மீண்டும் நெருக்கடி நிலை: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

  • December 27, 2025
  • 0 Comments

“எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து உள்ளது. இதற்கு அரசாங்கம் இடமளிக்ககூடாது. ஆளும் மற்றும் எதிரணிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க Roshan Ranasinghe தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு , “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிந்தித்து செயல்பட்டால் நல்லது. ஏனெனில் எதிர்வரும் ஏப்ரல் , மே மாதம் ஆகும்போது நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து […]

error: Content is protected !!