இலங்கை

இலங்கையில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

முன்பள்ளி முதல் தரம் 13 வரையிலான சிறார்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற மன்றத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி முன்பள்ளிச் சிறார்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பாலுணர்வு அறிவை வழங்குவதற்காக பதினான்கு புத்தகங்கள் தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்துப் புத்தகங்களையும் ஒரே நேரத்தில் அச்சிடுவது கடினம் என்பதால்  கூடுதல் வாசிப்புப் புத்தகங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாகவும்  முதலில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் கலந்தாலோசிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும்  அதன் பிறகு அரசு சார்பற்றவர்களின் ஆதரவைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

(Visited 45 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்