நிரந்தர போர் நிறுத்தத்துக்காக பிரிட்டன் களத்தில்: வளைகுடா நாடுகளுக்கு விரைகிறார் பிரதமர்!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் Keir Starmer வரவேற்றுள்ளார்.
தற்காலிக அமைதி முயற்சியை ஒரு நிலையான உடன்படிக்கையாக மாற்றுவதற்கு பிரிட்டன் முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதன்ஓர் அங்கமாக பிரதமர் வளைகுடா நாடுகளுக்கு விரைவில் பயணம் மேற்கொள்வார் என தெரியவருகின்றது. அந்நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கவும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு பிரிட்டன் முழு ஆதரவை வழங்கவுள்ளது.
இது விடயத்தில் முக்கிய வகிபாகத்தை வகிப்பதற்கும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.




