குவைத்தின் பாதுகாப்புக்காக களமிறங்கும் பிரிட்டன்!
குவைத்தின் Kuwait எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுக்குரிய பாதுகாப்பு உதவியை வழங்க பிரிட்டன் UK பிரதமர் Keir Starmer முன்வந்துள்ளார் என தெரியவருகின்றது.
இதற்கமைய பிரிட்டன் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை Air defence systems குவைத்தில் நிலைநிறுத்துவது குறித்து இரு நாடுகளினதும் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி பாதுகாப்பு ஏற்பாட்டுக்குரிய முன்மொழிவானது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை தணிக்க உதவும் என்பதுடன், அங்குள்ள பிரிட்டன் அதிகாரிகளின் நலன்களையும் பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை வர்த்தக ரீதியாக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்குரிய சாத்தியம் பற்றியும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.




