இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல்- நாமலின் கூட்டத்தின் மீது கல் வீச்சு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சிறு பிள்ளை கற் தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல் தாக்குதலில் மயூரபுர ரோட்டரி வீதியில் வசிக்கும் சிறு பிள்ளை ஒருவரே காயமடைந்துள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

கூட்டம் நடக்கவிருந்த மைதானத்தின் மீது சுமார் 3 கற்கள் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!