இலங்கை ஜனாதிபதி தேர்தல் : 14 வேட்பாளர்கள் பாதுகாப்பு தொகையை செலுத்தினர்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் இதுவரை தமது பாதுகாப்பு வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை செளரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர் ஆகியோர் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
(Visited 28 times, 1 visits today)