இலங்கை செய்தி

பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!

பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

எப் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் துலான் சாதனை படைத்துள்ளார்.

எப் 64 போட்டியில் சமித்த துலான், 67.03 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

எனினும் எப் 44 பிரிவில் ஏற்கனவே சமித்த துலான் நிலை நாட்டியிருந்த உலச சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதுடன், அவுஸ்திரேலியா வெள்ளி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில், எப் 44 பிரிவில் சமித்த துலான் வெண்கல பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 39 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!