பங்களாதேஷ் பிரதமருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு!
பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை Tariq Rahman., இலங்கை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பிரதமரின் பதவியேற்பு விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றிருந்தார்.
இந்நிகழ்வின் பின்னர் பங்களாதேஷின் பிரதமரான தாரிக் ரஹ்மானை சந்தித்த அமைச்சர், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்திய தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினர்.
பங்களாதேஷிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்தும் இந்த சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலும், பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.





