இலங்கை செய்தி

இந்திய மீன்பிடி படகில் வந்த இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

இந்திய மீன்பிடி படகு மூலம் வென்னப்புவ தல் தேகா (கடவத்தை) கடற்கரைக்கு வந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.

கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் வென்னப்புவ பொலிஸார், தல் தேகா கடற்கரையில் இரகசியமாக இறங்க முற்பட்ட வேளையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் மற்றும் இந்திய மீன்பிடி படகிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!