இலங்கை

இலங்கை : கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலாவில் ஈடுபட்ட அமைச்சர்கள்!

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய படகுகளில் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நேற்று பிற்பகல் துறைமுக இராஜாங்க அமைச்சர்  பிரேமலால் ஜயசேகர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்பப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுவிற்கு அனைத்து உணவு மற்றும் பானங்கள் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுக வளாகத்தில் ஒரு குறுகிய சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருப்பதால், அதில் பங்கேற்குமாறு துறைமுக இராஜாங்க அமைச்சர் திரு.பிரேமலால் ஜயசேகர உறுப்பினர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பியிருந்ததாகவும், இதற்கமைய குறித்த நிகழ்வில் அமைச்சர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!