இலங்கை செய்தி

இலங்கை – திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை!

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட தொழிற்சந்தை இன்று (25) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிவரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த தொழிற்சந்தையில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் தொழில் வழங்குனர்களாக தனியார் நிறுவனங்களும் உள்ளூர் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பல தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் தங்களின் ஆற்றல் இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தங்களின் தொழிற்சவாலை வெற்றி கொள்ளக் கூடியதாக இந்த தொழிற்சந்தை அமைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் நா. குகேந்திரா, மாவட்ட இணைப்பாளர் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெசினா பஹ்மி, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச் ஹில்மியா, பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்தேடுநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை