இலங்கை செய்தி

இலங்கையில் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள், அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைச் சமர்ப்பித்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டையைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 21ஆம் திகதி வரை அஞ்சல் நிலையங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தகுதி பெற்ற அனைவருக்கும், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையத்தில் செல்லுபடியாகும் அடையாள அட்டையைக் காண்பித்தும் வாக்களிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content