சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களைச் சுற்றி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலைய வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் புகை விசிறும் (Fogging) நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பரீட்சை காலப்பகுதியில் மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றித் தமது பரீட்சைகளை எழுதுவதற்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்” என்றார்.
மேலும், பாடசாலை அதிகாரிகள் மற்றும் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்களின் (PHI) ஒத்துழைப்புடன் பரீட்சை மண்டபங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது





