அரசியல் இலங்கை செய்தி

சமூக சக்தியென்பது வறுமை ஒழிப்பு ஆயுதம்: கிளிநொச்சியில் அமைச்சர் விளக்கம்!

“சமூக சக்தியென்பது கட்சியை வலுப்படுத்தும் அரசியல் ஆயுதம் அல்ல. அது வறுமையை ஒழிப்பதற்குரிய கூர்மையான ஆயுதமாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

எனவே, எல்லா விடயங்களிலும் எதிர்ப்பு அரசியல் நடத்தாமல், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (25.02.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

அடிப்படை வசதிகள் மேம்பாடு, மீன்வளத் துறை வளர்ச்சி, குடிநீர் வசதி, வீதி அமைப்பு, விவசாயம் மற்றும் இளைஞர் தொழில் வாய்ப்புகள் போன்ற முக்கிய துறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

குறிப்பாக “சமூக சக்தி” திட்டம் குறித்து கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளும், குறித்த திட்டத்தின் செயல்முறை மற்றும் அதன் நடைமுறைப்படுத்தல் குறித்து வினாக்களை தொடுத்தனர்.

குறிப்பாக, இந்தத் திட்டம் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்து என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

எனினும், அதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

“சமூக சக்தி” திட்டம் எவ்விதத்திலும் ஒரு கட்சியை வலுப்படுத்தும் அரசியல் முயற்சி அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

இது வறுமை ஒழிப்பு, சுயதொழில் மேம்பாடு மற்றும் சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டமாகும் என அவர் வலியுறுத்தினார்.

சமூகத்தின் பின்தங்கிய தரப்பினருக்கு நேரடி நன்மை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தை எல்லா வழிகளிலும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!