இலங்கை செய்தி

சிவயோகபதி கௌதமனின் பூதவுடல் யாழில் அஞ்சலிக்காக வைப்பு

அவித்தாவ ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்ற பொது சுகாதார பரிசோதகர் சிவயோகபதி கௌதமனின் பூதவுடல் இறுதி கிரியைகளுக்காக அச்சுவேலி பத்தமேனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள குறித்த இளைஞன் மொரட்டுவ பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதராக கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குளத்தில் நீராடச் சென்ற போதே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

இவர்களில் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர்.

இதில் எஸ்.கெளதம் அச்சுவேலி பத்தமேனியை சேர்ந்தவர்.

அச்சுவேலி இளைஞனின் பூதவுடல் இன்று மதியம் ஒரு மணியளவில் பத்த மேனி தீத்தாங்குளம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!