அமெரிக்காவில் அதிர்ச்சி! ஆய்வகத்திலிருந்து தப்பிய கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்குகள்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பெரிய நெடுஞ்சாலையில் நடந்த ஒரு லொரி விபத்துக்குப் பிறகு, பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 3 ரீசஸ் குரங்குகள் ஆய்வகத்திலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரீசஸ் குரங்குகளை ஏற்றிச் சென்ற லொரி கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள டூலேன் பல்கலைக்கழகத்திலிருந்து குரங்குகள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹெபடைடிஸ் சி (Hepatitis C) மற்றும் கோவிட்-19 (COVID-19) போன்ற வைரஸ்களால் விலங்குகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது பொதுமக்களுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கூறினர்.
குரங்குகள் என்று சந்தேகிக்கும் விலங்குகளை அணுக வேண்டாம் என்றும், அத்தகைய விலங்கைக் கண்டால் உடனடியாக அவர்களுக்குத் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நிலைமை விசாரணையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் குரங்குகள் அதிக ஆக்ரோஷமானவை மற்றும் மக்களை நோக்கி ஆக்ரோஷமாக நெருங்கக் கூடியவையாகும். கையாள தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தேவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.





