ஆசியா

சீனாவில் ஜன்னலை கதவு என தவறாக நினைத்த மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி

சீனாவில் ஜன்னலை கதவு என தவறாக நினைத்த 102 வயது மூதாட்டி 3ஆவது மாடியிலிருந்து விழுந்துள்ளார்.

எனினும் அதிஷ்டவசமாக வழிப்போக்கர்கள் அவரை தாங்கிப் பிடித்துக் காப்பாற்றியுள்ளனர்.

ஹெனான் மாநிலத்தின் சுமாடியான் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கீழே விழுந்த மூதாட்டி ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

மக்கள் அவசரச் சேவையைத் தொடர்புகொண்டனர். எனினும் மூதாட்டி கீழே விழும் அபாயம் காணப்பட்டுள்ளது. அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் உடனே தமது கடையில் இருந்த விரிப்பைக் கொண்டு வந்துள்ளார்.

சுமார் 12 பேர் அந்த விரிப்பைப் பிடித்துக்கொண்டனர். மூதாட்டி பிடியை இழந்து கீழே விழுந்தார். வழிப்போக்கர்கள் அவரைப் பாதுகாப்பாக விரிப்பில் பிடித்தனர்.

மூதாட்டியின் குடும்பத்தார் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவருக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டன. அவர் அன்று மதியமே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்