ஐரோப்பா

பிரான்ஸில் பல வாகனங்கள் தீக்கிரை – அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞன்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் அண்மைய நாட்களில் பல்வேறு வாகனங்களை தீக்கிரையாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

3 ஆம் வட்டாரத்தின் rue Meslay வீதியில் தரித்து நிக்கவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சில எரியூட்டப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு வாகனங்களை எரியூட்டிக்கொண்டிருந்த 23 வயதுடைய இளைஞனை சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்தனர். அவன் 3 வாகனங்களை எரியூட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான அதே நபர் முன்னதாக இது போன்று பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை எரியூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்