பொழுதுபோக்கு

முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் காதலியை லைக் செய்தார் சமந்தா

சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றது அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்ததை நாக சைதன்யா உறுதி செய்தார்.

சமந்தாவை பிரிந்த பிறகு பொன்னியின் செல்வன் படம் புகழ் நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக பல மாதங்களாக பேசப்படுகிறது.

நாக சைதன்யாவும், சோபிதாவும் காதலிப்பது உறுதி தான் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன் பர்சனல் குறித்து பேச விரும்பவில்லை நாக சைதன்யா என அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

விவாகரத்துக்கு பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் அவரவர் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் தான் சமந்தா செய்த காரியம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வியக்க வைத்திருக்கிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக மனிஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்த சேலை அணிந்து சென்றார் சோபிதா துலிபாலா. அந்த சேலையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அந்த போஸ்ட்டை நாக சைதன்யா லைக் செய்தார். மேலும் சமந்தாவும் லைக் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சமந்தாவை சோபிதா ஃபாலோ செய்யவில்லை. அப்படி இருந்தும் அவரின் புகைப்படத்தை சமந்தா லைக் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இரண்டாம் திருமணம் குறித்து விசாரித்தபோது நாக சைதன்யா மற்றும் சோபிதாவுக்கு பழக்கமான ஒருவர் கூறியதாவது,

நாக சைதன்யாவுக்கும், தொழில் அதிபர் மகளுக்கும் திருமணம் என்பதில் உண்மை இல்லை. அவர் சோபிதாவை தான் காதலித்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. திருமணம் முடிவாகும் வரை அவர்கள் காதலை வெளியே சொல்லப் போவது இல்லை என்றார்.

நாக சைதன்யாவை காதலிப்பது குறித்து சோபிதா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. நாக சைதன்யாவும் அப்படித் தான். அவருக்கு பர்சனல் வாழ்க்கை பர்சனலாகவே இருக்கத் தான் விருப்பம்.

தானும், சமந்தாவும் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டதால் இன்னும் கடந்த காலம் பற்றியே பேச வேண்டாம் என நாக சைதன்யா கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content