இலங்கை செய்தி

பாதுகாப்பான வீட்டு திட்டம் – தோட்ட தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் ரூபாவில் புதிய வீடு

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய,650 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 05 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன் தொழிலாளர்கள் தற்போது பணிபுரியும் தோட்டங்களிலேயே
பாதுகாப்பான இடங்களில் 10 பேர்ச்சஸ் காணி இதற்காக ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீடுகளுக்குத் தேவையான மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் ஏனைய பொதுக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சும், ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் சேவை தொடர்ச்சியாகத் தேவைப்படுவதால், அவர்கள் பணிபுரியும் தோட்டப் பகுதிகளிலேயே இந்தப் பாதுகாப்பான குடியிருப்புக்களை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கமைய மண்சரிவு மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அதிக அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவது அவசியமாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, மண்சரிவு அபாயம் காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ வீடுகளை இழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே பிரதான நோக்கம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!