வெப்பநிலை உயர்வு – கிரீன்லாந்தில் அழிவடைந்து வரும் இன்யூட் மக்களின் கலாச்சாரம்!
கிரீன்லாந்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நாய் சவாாி தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆர்டிக் பகுதிகளில் பனிகட்டிகள் உருகி வருவதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையானது ஆயிரம் ஆண்டுகள் பழமையான இன்யூட் நடைமுறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலை நிரந்தர உறைபனி உருகுவதற்கும் உலகளாவிய கடல் மட்ட உயர்வுக்கும் கணிசமாக பங்களிக்கிறது. அத்துடன் முக்கியமான கனிம படிவுகளை வெளிப்படுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்க்டிக் உலக சராசரியை விட மூன்று முதல் நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைகிறது. சூழல் மாசுபாடு பனி உருகுவதை துரிதப்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.





