ஆசியா

ஜப்பானில் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்த அரிசி விலை

ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்துவிட்டது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இவ்வாறு விலை அதிகரித்துள்ளது.

அரசாங்கம் நெருக்கடிக்காகச் சேமிக்கப்பட்ட இருப்பில் இருந்து அரிசியை வெளியே கொண்டுவந்தும் அரிசியின் விலை உயர்வைத் தடுக்க முடியவில்லை.

ஜப்பானில் கடந்த மாதம் அடிப்படைப் பணவீக்கம் 3.7 சதவீதம் பதிவாகியுள்ளது.

அடுத்த மாதம் பொதுத்தேர்தல் வரும் நேரத்தில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் தலைமைக்கு விலைவாசி உயர்வு மிரட்டலாக அமையும் என்று கருதப்படுகிறது.

விலைவாசி உயர்வினால் விரக்தி அடைந்திருக்கும் மக்கள் பிரதமர் இஷிபாவின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!