இலங்கை செய்தி

சதொசவை மூட தீர்மானம்

சதொச நிறுவனங்களை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிறுவனங்களை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்தை கலைத்து அதன் சொத்துக்களை லங்கா சதொச நிறுவனத்திடம் கையகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல்களில் நிதி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!