இலங்கை செய்தி

காணாமல் போன மாணவிகள் மீட்பு

சாதாரண தரப் பரீட்சையின் போது காணாமல் போன பாடசாலை மாணவிகள் இருவரும் உறவினர் வீட்டில் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (15) மாணவர்கள் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக இரு மாணவர்களின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகமுவ தேசிய பாடசாலையில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திற்கு வந்த இரு மாணவிகள் கடந்த 14 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றாமல் காணாமல் போயுள்ளனர்.

இதன்படி, குறித்த மாணவிகள் தொடர்பில் அவர்களது குடும்பங்களின் உறவினர்களால் கினிகத்தேனை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு மாணவர்களும் கொழும்புக்கு வந்திருப்பதும், கடுவெல பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்திருப்பதும் தெரியவந்தது.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை