ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ : 3,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்!

ஸ்பெயின் காட்டுத்தீ வேகமாக பரவிவருகின்ற நிலையில் தலைநகரம் முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.
மத்திய ஸ்பெயினின் காஸ்டில்-லா மஞ்சா பகுதியில் உள்ள மென்ட்ரிடா நகரில் தலைநகரிலிருந்து தென்மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வீட்டிலேயே தங்கி ஜன்னல்களை மூடுமாறு வலியுறுத்தினர்.
சுமார் 3,000 ஹெக்டேர் (தோராயமாக 7,400 ஏக்கர்) தீயில் எரிந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற்பகல் 3 மணியளவில் தொடங்கிய தீயை அணைக்க தரையிலும் வானத்திலும் தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வந்தனர்.
ஸ்பெயினின் பெரும்பகுதிகள் வெப்பம் மற்றும் தீ எச்சரிக்கையின் கீழ் உள்ளன, வியாழக்கிழமை மாட்ரிட்டில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (100 டிகிரி பாரன்ஹீட்) ஐ எட்டியுள்ளது.
ஐரோப்பா உலகின் மிக வேகமாக வெப்பமடையும் பகுதிழயாக ஸ்பெயின் காணப்படுகிறது. 1980 களில் இருந்து உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.