குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அமைச்சரவையில் பணியாற்றிய பல முன்னாள் அமைச்சர்களிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)