” யாழ்.மக்களாலேயே ரணில் தோற்றார்” – ஐ.தே.க. கவலை
“2005 ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு மக்கள் வாக்களிப்பை புறக்கணிக்காது இருந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்.” – என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே Ranil Wickremesinghe வெற்றி பெற்றிருப்பார். யாழ்ப்பாணத்தில் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் அவர் இலகுவில் வென்றிருப்பார்.
அந்த தேர்தலில் தோற்ற பின்னரே ரணிலின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.
ரணில் விக்கிரமசிங்க என்பவர் சிறந்த தலைவர். தூர நோக்கு சிந்தனை உடையவர்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.





