ஈரானில் 05ஆவது நாளாக தொடரும் போராட்டம் – முடியாட்சியை மீள கோரும் மக்கள்!
ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகின்றமையால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் விளைவாக பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் (Lordegan) நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அஸ்னாவில் (Azna) மேலும் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் (Kouhdasht) ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஃபார்ஸ் (Fars) செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் போது கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றன.
நாட்டின் உச்ச தலைவரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், முடியாட்சியை மீள வலியுறுத்தியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





