இலங்கை

இலங்கையில் அதிக வெப்பநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை இது தொடர்பில் விடுத்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.

அதிக வெப்பம் காரணமாக வேலை செய்யும் இடங்களில் அதிக நீர் பருகுதல், வெளியே செல்லும் போது நிழலில் இருத்தல், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைச் வெப்பத்திலிருந்து பாதுகாத்தல், வாகனங்களில் குழந்தைகளை கூட்டி செல்வதை தவிர்த்தல் ,வெளிப்புற செயற்பாடுகளை தவிர்த்தல், வெளிர் நிற ஆடைகளை அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!