தென்கொரியாவில் ஓடும் மெட்ரோ ரயிலில் தீ வைத்த பயணி – உயிர் தப்பிய 160 பயணிகள்

தென்கொரியாவில் ஓடும் மெட்ரோ ரயிலில் தீ வைத்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பெட்டியில் பயணி ஒருவர் போத்தலில் இருந்த எரிபொருளைக் கொட்டி தீ வைத்ததால் ரயில்பெட்டி தீக்கிரையானது.
ரயில் பெட்டியில் இருந்த 160 பயணிகள் அலறியடித்து ஓடியதில் 23 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த மே 31ம் தேதி சியோல் மெட்ரோ ரயிலிலில் நிகழ்ந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
வான் என்ற 67 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விவாகரத்து வழக்கின் தீர்ப்பு காரணமாக ஆத்திரத்தில் அவர் இக்காரியத்தை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
(Visited 2 times, 2 visits today)