ஐரோப்பா

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் குவியும் சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள்

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை இரண்டாம் ஆண்டாக உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவுக்கு வெளியில் இருந்து 115,730 மாணவர்கள் செப்டம்பரில் தொடங்க விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 114,910 ஆக இருந்தது.

குடியேற்றத்தை குறைக்க உதவும் கடுமையான அரசாங்க விதிகள் இருந்தபோதிலும் இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றது.

பிரித்தானிய மாணவர்களை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தரத்தை பல்கலைக்கழகங்கள் குறைத்துள்ளன என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர் சர்வதேச விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 116,110 ஆக இருந்தது.

சர்வதேச பயணம் தடைசெய்யப்பட்ட அடுத்த இரண்டு ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்தது, ஆனால் அதன் பின்னர் மீண்டு வருகிறது.

சர்வதேச மாணவர் விண்ணப்பங்களின் அதிகரிப்பு வருங்கால உள்நாட்டு மாணவர்களின் கவலையை ஏற்படுத்தக்கூடாது. ஏனெனில் பிரித்தானிய விண்ணப்பங்களும் சமீபத்திய ஆண்டுகளில் உயர்ந்துள்ளதெனபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சேர்க்கை சேவைகள் (Ucas) தலைமை நிர்வாகி ஜோ சாக்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

 

(Visited 16 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content