இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

உயர்தர பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தரதார உயர்தர பரீட்சை பிற்போடமாட்டாது அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அதன்படி, கல்விப் பொதுத்தரதார உயர் தர பரீட்சை நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து மாத்திரம் பரீட்சை நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பரீட்சை திகதி குறித்து சமூக ஊடகங்களில் போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

எனவே, மாணவர்கள் தயவுசெய்து பரீட்சை திணைக்களம் மற்றும் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி தகவல்களை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

(Visited 122 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை