இலங்கை

முல்லைத்தீவு – இராணுவத்தினரின் செயற்பாட்டால் ஆத்திரமடைந்த கேப்பாபிலவு மக்கள்

இராணுவத்தினரின் செயற்பாட்டால் கேப்பாப்பிலவு கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயமும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலய தேவை கருதி ஆலய நிர்வாகத்தினரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் தடிகள் வெட்டப்பட்டு ஆலயத்திற்கு ஏற்றி செல்லப்பட்ட போது கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த இராணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் தீபாவளி நாளான நேற்றையதினம் ஒப்படைத்துள்ளனர்.

தீய செயல்களுக்கு மட்டுமே இராணுவத்தினர் துணை போவதாகவும், மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் குறித்த படை இராணுவத்தினர் செயற்படுவதாகவும் குறித்த கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்