மயங்கி விழுந்த மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதி – பொலிஸார் விசாரணை
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மது அருந்திய சம்பவம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, மேக்ஸ்வெல் அடிலெய்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த 19ம் திகதி மயங்கி விழுந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் மேக்ஸ்வெல் இடம் பெறவில்லை.
சம்பவத்தன்று, மேக்ஸ்வெல் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்ததாகவும், அங்கு இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்போது மேக்ஸ்வெல் மது அருந்தி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 19 times, 1 visits today)





