ஆசியா

சிங்கப்பூரில் தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

சிங்கப்பூரில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிராம் $S100 வெள்ளியை தாண்டியதாக நகைக் கடைகள் கூறுகின்றன.

சில முக்கிய கடைகளில் தங்க நகை ஒரு கிராமின் விலை $S100 வெள்ளியை தாண்டி விற்கப்படுவதாக வாசகர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புடைய ஒரு பவுன் ரூ.54,000ஐ தாண்டி விற்பனையாவதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை உலக அளவில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் இந்த விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் அமெரிக்க மத்திய வங்கியானது அதன் வட்டி விகித அளவை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பினாலும் விலை சட்டென்று உயர்வதாக கூறப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பு என கருதுவதால் இந்த நிலை நிலவுதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!