உலகம்

பிரேசிலில் புயல் தாக்கத்தினால் பலர் உயிரிழப்பு!

பிரேசிலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் மலைப் பகுதிகளில், மீட்பு பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஏறக்குறைய எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்டை மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோ குறைந்தது நான்கு பேர் இறந்ததையும் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

இத்தகைய சுற்றுச்சூழல் அவலங்கள் “காலநிலை மாற்றத்துடன் தீவிரமடைந்து வருகின்றன” என்று ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா  தெரிவித்துள்ளார்.

மேலும் டிவெள்ள சேதத்தை பாதுகாக்க, தடுக்க மற்றும் சரிசெய்ய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 26 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!