ஐரோப்பா

சுவிஸ் நகரமொன்றில் கையில் கத்தியுடன் ஆடையின்றி நடமாடிய நபர்: கைது செய்த பொலிசார்

சுவிஸ் நகரமொன்றில், ஆடையின்றி, கையில் கத்தியுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடமாடிய ஒருவரை பொலிசார் மடக்கிப் பிடித்தார்கள்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்திலுள்ள Wollishofen என்னுமிடத்தில், ஆடையின்றி உலாவந்தார் ஒருவர். கையில் கத்தியுடன் பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் அவர் நுழைய, மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், அந்த நபரிடம் கத்தியைக் கீழே போடுமாறு கூறியும் அவர் கத்தியைக் கீழே போடவில்லை. அவர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்தும் அவர் கட்டுக்குள் வரவில்லை. எனவே டேஸர் மூலம் அவரைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள் பொலிசார்.

அவர் போதைப்பொருட்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றுவதாக பொலிசார் கூறியுள்ளார்கள்.

சமீபத்தில் யூதர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் உஷார் நிலையில் காணப்படும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு உருவானது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!