இலங்கை செய்தி

கம்பஹா-கடவத்தையில் CID அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து நபர் கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொலிஸ் பரிசோதகர் (IP) போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு பெண்ணிடம் இருந்து 25,000 கோரிய குற்றச்சாட்டின் பேரில் கடவத்தையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து குறித்த பெண்ணுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலைக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதாக கூறி அவரிடம் பணத்தை கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்படி, மேல்மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை பொலிஸாரால் சந்தேகநபர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் போலி அடையாள அட்டை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

33 வயதான சந்தேக நபர் மபிம, ஹெய்யன்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content