இங்கிலாந்தின் போர்ன்மவுத் கொடூர தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு , மூவர் கைது
இங்கிலாந்தின் போர்ன்மவுத்தில் (Bournemouth) உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொலைச் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை , சார்மின்ஸ்டர் (Charminster) வீதியில் உள்ள MyBar மதுபான விடுதிக்கு வெளியே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கிறிஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வழக்கில், போர்ன்மவுத்தைச் சேர்ந்த 37 மற்றும் 46 வயதுடைய இரு ஆண்களும், பூலைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக டோர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்
அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் டாஷ்கேம் காட்சிகள்
கொண்டவர்கள் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





