மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி மீண்டும் அழுத்தம்!
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி issa Kuttiarachchi இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றிபெறும்.” – எனவும் திஸ்ஸ குட்டியாராச்சி குறிப்பிட்டார்.





