ஐரோப்பா

பிரான்ஸில் ரயிலுடன் மோதிய லொறி : இருவர் ஆபத்தான நிலையில்!

பிரான்சில்  ரயில் ஒன்று லொறி ஒன்றின் மீது மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வடக்கு பிரான்சின் பாஸ்-டி-கலே பகுதியில் உள்ள பெத்யூன் (Bethune) மற்றும் லென்ஸ் (Lens) நகரங்களுக்கு இடையேயான ரயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ள அதேநேரம் மேலும் 11 பேர் லேசான காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

குறித்த லொறி இராணுவ உபகரணங்களை கொண்டுச் சென்றதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!